• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் “- கே.பி.முனுசாமி

May 2, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“ஓ.பன்னிர்செல்வம் அணி சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் வரவிற்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த பயணத்திற்கான சுற்றுப்பயணம் மே 5-ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். சுற்றுப்பயணத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

இரு அணிகள் இணைய நாங்கள் நிபந்தனை விதிப்பது மக்களின் நன்மைக்காகவே. எங்களின் நிபந்தனையை தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றால் அவர்களுக்கு நல்லது நடக்கும்”.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க