• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

May 9, 2017 தண்டோரா குழு

கேரளாவில் நீட் தேர்வின் போது உள்ளாடையை அகற்ற சொன்ன நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நீட் எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 7- ம் தேதி நடந்தது. கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளை ஆடை விதிகளின்படி துப்பட்டா, மற்றும் இரும்பு பொத்தான் பதித்த ஆடைகள், உள்ளாடையை அகற்றி விட்டு தேர்வு எழுதும்படி, தேர்வு மையகண்காணிப்பாளர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஒரு மாணவி தனது உள்ளாடையை கழற்றிவிட்டு தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், தேர்வு எழுத வந்த பிற மாணவ, மாணவியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதற்கு கேரளா மாநில முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த மையத்தில் பணி புரிந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க