• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்மாவட்டங்களில் கோடை மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 3, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. உள்மாவட்டங்களை பொறுத்த வரை மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது.

இதனால் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெப்பநிலை இயல்பிலிருந்து, 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, செங்கோட்டையில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை.”

இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க