February 11, 2019
தண்டோரா குழு
உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது
உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இன்று வலிப்பு நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 6.5 கோடி மக்கள் வலிப்பு நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நீயுராலஜிக்கள் சொசைட்டி சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை தலைவர் அசோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வலிப்பு நோய் குணமடைய செய்வது குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் நரம்பியல் நிபுணர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏரலமனோர் கலந்துகொண்டனர்.