• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

February 11, 2019 தண்டோரா குழு

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது

உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இன்று வலிப்பு நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சுமார் 6.5 கோடி மக்கள் வலிப்பு நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நீயுராலஜிக்கள் சொசைட்டி சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை தலைவர் அசோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வலிப்பு நோய் குணமடைய செய்வது குறித்தான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணியானது அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் நரம்பியல் நிபுணர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏரலமனோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க