• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் நீளமான முயல் சைமன் மறைவு

April 26, 2017 தண்டோரா குழு

உலகின் நீளமான முயல் சைமன் ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உலகில் நீளமான முயல் என்று கருதப்பட்ட சைமன் 3 அடி நீளம் கொண்டது.சைமன் லண்டன் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க நாட்டின் சிகாகோ விமான நிலையத்திற்கு ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தது. சைமனை சரக்குகள் வைத்திருக்கும் இடத்தில் விமான ஊழியர்கள் வைத்துள்ளனர். ஆனால், சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானத்திலிருந்த சரக்குகளை விமான ஊழியர்கள் இறக்கிக்கொண்டிருந்தபோது, சைமன் இறந்துவிட்டதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சைமனின் உரிமையாளர் எட்வர்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சைமனின் தந்தை டேரியஸ் 4 அடி நீளம் இருந்தது. அவரை விட சைமன் நீளமாக வளருவான் என்று ஆவலோடு இருந்தேன். அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஒருவர் சைமனை என்னிடமிருந்து வாங்கிவிட்டார். அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. அவரிடம் அனுப்புவதற்காக சைமனை விமானத்தில் அனுப்பி வைத்தேன் . அவனை ஏற்றும்போது அவன் நன்றாக இருந்தான். அதன்பிறகு, ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. நான் இதற்கு முன் பல முயல்களை விமானத்தில் அனுப்பியிருக்கிறேன். இது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

சைமனின் மரண செய்தி எங்களுக்கு அதிக வருத்ததை தருகிறது. இது குறித்து விசாரனை மேற்கொண்டுளோம். என்றார்.

மேலும் படிக்க