• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்

March 18, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பெரிய மாநிலமான 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 11-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. அதில் 324 தொகுதிகளில் பா.ஜ.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ளது. எனினும், அங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் பா.ஜ.க., முழுக்கவனம் செலுத்தி வந்தது.

இது தொடர்பாக டில்லி பா.ஜ.க., மூத்த நிர்வாகிகள், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசித்து வந்தனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம், லக்னோவில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வராக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

44 வயதாகும் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலிருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். கோரக்பூர் மடத்தின் நிர்வாகியாகவும், இந்து யுவ வாகினி என்ற கலாசார அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க