• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தரகாண்ட் நிலச்சரிவு பக்தர்கள் மீட்பு

May 20, 2017 தண்டோரா குழு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.

பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள விஷ்ணுபிரயாக் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை முழுவதும் மண் சரிந்த நிலையில் அருகிலுள்ள அலக் நந்தா ஆற்றிலும் மண் சரிந்தது. இதனால் பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டுள்ளதால் பக்தர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாதுகாப்பு மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க