• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உணவுப் பொருட்களைச் செய்தித்தாள்களில் மடித்துத் தர தடை

December 9, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் மடித்துத் தர தடை விதித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரும்பாலும் உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் என அனைத்தும் செய்தித்தாள்களில்தான் மடித்துத் தரப்படுகின்றன.

நட்சத்திர உணவு விடுதிகள், உயர்தர உணவகங்களில் பெரும்பாலும் அவ்வாறு தரப்படுவதில்லை. உடலுக்கு தீங்கு விளைவாக்காத உலோகத் தாள்களில் அதற்கென வடிவமைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் வைத்துத் தருகின்றனர்.

செய்தித் தாள்களில் அச்சிடுவதற்கு காரீயத்தில் செய்யப்பட்ட மை ஆகும். அதனால், செய்தித்தாளில் மை படிந்து விடும். அதில், உணவுப் பொருட்களைக் கட்டித் தந்தால், தாளில் படிந்திருக்கும் மை உணவுப் பொருட்களுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்திவிடும் என்று பலத்த புகார் எழுந்தது. இது குறித்து குழு அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்ட மத்திய உணவுத் துறை அதற்குத் தடை விதித்துவிட்டது.

இது குறித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் மடித்துத் தருவதற்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தித் தாள்களில் உள்ள மையால் உடல் நலத்திற்குக் கேடு ஏற்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தடை உத்தரவு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க