கோவை உக்கடம் ஆத்துப்பாலம்
இரண்டாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடந்துவருகின்றன. பொள்ளாச்சி உடுமலை பழனி கேரளா செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.மாநகருக்குள் இருந்து குனியமுத்தூர் சுந்தராபுரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கடந்த மாதம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று உக்கடம் ஆத்துப்பாலம் பாலம் பணிகள் நடந்து வரும் பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு இரு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.இப்பாதையில் பொள்ளாச்சி வழியாக பஸ்கள் டவுன் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் விரைவில் மேம்பால பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு