கோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேர் இஸ்ரோவிற்கு இரண்டு நாட்களுக்கு கல்வி சுற்றுலா சென்று உள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ்,அரசுப்பள்ளி மாணவர்களை இஸ்ரோவிற்கு கடந்த ஆண்டு அழைத்து சென்றனர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக கோவையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களை இன்று இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிகள் மற்றும் விஞ்ஞானிகளை மாணவர்கள் நேரடியாக சந்திக்க உள்ளனர். இரண்டு நாட்களுக்கு செல்லும் இந்த சுற்றுலாவில் 6 ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்து செல்கின்றனர்.மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள கல்வியறிவு மட்டுமல்லாத வெளி உலகில் நடக்கும் நடைமுறை கல்வியினையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் அமைய உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.