January 16, 2019
இளைய தலைமுறை இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க தயாராக உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை கமல்ஹாசன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். டெல்லியை தவிர்த்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.இளைய தலைமுறை இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க தயாராக உள்ளது. மக்கள் மத்தியில் ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.