• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளையராஜா பாராட்டு விழாவுக்கு செய்த செலவு எவ்வளவு? – உயர்நீதிமன்றம் கேள்வி

January 28, 2019 தண்டோரா குழு

இளையராஜா பாராட்டு விழாவுக்கு செய்த செலவு எவ்வளவு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ’இளையராஜா 75’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்தது. இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பகுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இதற்கு வரும் 28ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு, உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு என்றும் நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு கணக்கு குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக் கல் செய்ய வேண்டும். நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு முடியும் வரை இந்த நிகழ்ச்சி யை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது.

மேலும் படிக்க