• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த பேத்தியின் உடலை தோளில் சுமந்து சென்ற தாத்தா

July 15, 2017 தண்டோரா குழு

ஹரியான மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், இறந்த பேத்தியின் உடலை அவள் தாத்தா தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹரியான மாநிலத்தின் பரிதாபாத் நகரை சேர்ந்த 9 வயது சிறுமி லக்ஷ்மி, காய்ச்சலால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாள், ஆனால் அவளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால் பாரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய உடலை வீட்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவையை கேட்ட போது, அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இறந்த பேத்தயின் உடலை அவளுடைய தாத்தா தனது தோளில் சுமந்துக்கொண்டு சுமார் 12 கிலோமீட்டர் நடந்துள்ளார். அவருடைய பரிதாப நிலையை கண்டவர்கள், அதை குறித்து விசாரித்துள்ளனர்.

காய்ச்சலால் அவதிப்பட்ட பேத்தியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அவரிடம் தேவையான பணம் இல்லாததால் அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே பேத்தியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கும் அவளுக்கு சிகிச்சையும் ஆம்புலன்ஸ் சேவையும் மறுக்கபட்டதையும் அவர் கூறியுள்ளார். இதை கேட்டவர்கள், உடனே தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்துள்ளனர். அம்புலன்ஸ் வந்ததும் அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு மக்கள் அவதிபடுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஜூலை 12ம் தேதி, ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணி பெண்ணை தோள்களில் சுமந்துக்கொண்டு ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாம்புகடி ஏற்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை தர தாமதித்தால் தான் அவருடைய உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகியது. அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் உதவியை கேட்ட போது, அதையும் மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க