• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரு அணிகளும் இணைய வேண்டும் – பொன்னையன்

April 26, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் இரு அணிகளும், அம்மாவின் தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த பொன்னையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார், எனவே தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையே.

இந்த விவகாரத்தில் புலனாய்வு செய்து உண்மைகளை அதிகாரிகள் வெளிக்கொண்டு வர வேண்டும். லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் மூலம் சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கே தலை குனிவையும், மானக்கேட்டையும் ஏற்படுத்தி விட்டனர்.

இரட்டை இலை பெற்று ஓ.பி.எஸ். அணியை அழிக்க வேண்டும் என நினைத்தனர். அதை ஜெயலலிதாவின் ஆத்மாவும், ஆவியும் பார்த்துக் கொண்டிருக்காமல் பழிவாங்கி விட்டது. இதனால் ஓ.பி.எஸ். அணி தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

நேர்மையும், சத்தியமும் சட்டத்தின் நீதியும் வென்று விட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே போயஸ் தோட்டத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும், அம்மாவின் தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவரின் விருப்பமாகும். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஓ.பி.எஸ். அணிக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க