• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரத்தினம் கல்வி குழுமம் சார்பில் இணைய வழி மூலம் கற்றல் பயிற்சி

March 18, 2020 தண்டோரா குழு

தமிழக அரசு கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என அறிவித்துள்ளது. எனவே இன்று இரத்தினம் கல்வி குழுமம் சார்பாக இணைய வழி மூலம் கற்றல் பயிற்சியானது ஆசிரியர்களுக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 175 கும் மேற்பட்ட ரத்தினம் கல்வி குழும பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் முனைவர் ஆர் முரளிதரன் வழங்கினார்.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வழக்கமான வகுப்பில் கலந்து கொள்ளாமல் தங்கள் வீட்டில் இருந்து கல்வி கற்க மாணவர்களுக்கு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.MS TEAMS (Microsoft Teams) என்கிற செயலியின் மூலம் மாணவர்களை தொடர்புகொள்வதற்கும், முக்கியமான சுற்றறிக்கைகளை அனுப்பவும்,இணைய வழி கற்பித்தல்,இணைய வழி தேர்வுகள் போன்றவை ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.எனவே இரத்தினம் கல்லூரி மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் (Microsoft Teams) மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் இனைய வழி மூலம் கேட்க முடியும். மேலும், மாணவர்கள் புரிந்துகொள்ளும் அளவை சோதிக்க மாணவர்களுக்கு பணி(Assignment) மற்றும் வினாடி வினாவும் (Quiz Test) நடத்தப்படுகிறது. ஓவ்வொரு பாடத்தின் சம்பந்தப்பட்ட தலைப்பில் ஆசிரியர்கள் வீடியோவை பதிவிட முடியும். இந்த செயல்முறையின் மூலம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்ளவும், தெளிவுபடுத்தவும் முடியும் மேலும் இது மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற இந்த முயற்சி ஊக்குவிக்கிறது. இனைய வழி கற்பித்தல் மூலம் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அவர்களுக்கு கல்வி கற்பிக்க இரத்தினம் கல்லூரி திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரமாக பரவினால் தற்போதைய நிலைமை மாறக்கூடும். எந்தவொரு தொழில் வல்லுனரும் வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளலாம். Http://aicraise.com/againstcorona என்ற இந்த இணைப்பு மூலம் தொழில் வல்லுநர்களை இணைப்பதற்கு ரத்தினம் கல்வி குழுமம் மிகவும் ஆர்வமாக உள்ளது.

மேலும் படிக்க