• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

April 17, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் இடைத்தரகர் எஸ்.கே.சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தில்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் ரூ.1.30 கோடியை தில்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தர அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடமிருந்து லஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க