• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் கே. விஸ்வநாதுக்கு தாதா சாகேப் பால்கே விருது

April 24, 2017 தண்டோரா குழு

பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத்.அவருக்கு வயது 87. ‘குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம வில்லன்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, ஐந்துதேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், 20க்கும் மேற்பட்ட நந்தி விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது ‘தாதா சாகேப் பால்கே’ விருது. 2016-ம் ஆண்டுக்கான இந்த விருதை பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க