• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதினை திருப்பி அனுப்பிய விஜய் ரசிகர்கள்

February 13, 2020

இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு கோவை ராஜவீதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி துவக்க விழா மேடையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு சேவகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து விஜய் குறித்து விமர்சித்து வரும் அர்ஜீன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விருதினை தபால் மூலம் திருப்பி அனுப்பும் போராட்டத்தை விஜய் ரசிகர்கள் மேற்கொண்டனர்.

இதனிடையே இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இந்து மக்கள் கட்சி வழங்கிய விருதினை தபால் மூலம் அனுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

கடந்த ஆண்டுகளாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் ஊடகங்களில் தொடர்ந்து நடிகர் விஜய்குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசி வருவதாகவும், இதனால் விஜயின் ரசிகர்களாகிய தாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும்,அதனால் இந்து மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதினை திரும்ப அனுப்பவதாகவும் கூறினர்.

மேலும் படிக்க