• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கர்ணலுக்கு நன்றி கூறிய வங்கேத பிரதமர்

April 12, 2017 தண்டோரா குழு

1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரின் போது தன்னை காப்பாற்றிய இந்திய கர்ணலுக்கு வங்கதேச பிரதமர் நன்றி கூறினார்.

1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான்- வங்கேதச போரில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவும் போரில் ஈடுபட்டது. போரில் உயிரிழந்த இந்திய வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக விழா புதுதில்லியில் சனிக்கிழமை(ஏப்ரல் 8) நடைபெற்றது.

அந்த விழாவில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்றார். இந்திய பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.இந்த நிகிழ்ச்சியில் 46 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கர்ணல் தாராவும் பங்கேற்றிருந்தார். வங்கதேச போரின் போது அவர் பணியாற்றினார். போரின் போது பாகிஸ்தான் படை வங்கதேச பிரதமர் ஹசினாவின் குடும்பத்தினரை சிறை வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க தாரா மூன்று ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். புத்திசாலிதனமாக கையாண்டு, ஹசினாவின் குடும்பத்தினரை பத்திரமாக காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் தாராவை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு நன்றியும் கூறினார்.

இது குறித்து தாரா கூறுகையில்

“வங்கதேச பிரதமர் என்னையும் என் மனைவியை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கையில் ஆயுதம் இல்லாமல் அன்று தனிமையாக சூழ்நிலையை புத்திசாலிதனமாக கையாண்டு என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றினார் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கூறினார் ” என்றார் கர்ணல் தாரா.

மேலும் படிக்க