• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல் சந்திப்பு

February 17, 2018 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நடிகர் கமல்ஹாசன் இன்று(பிப் 17)சந்தித்தார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை இன்று நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.

கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் அவரை சந்தித்தேன் என்றும்,இந்தசந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும்,இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன் என்றும் கூறினார்.

மேலும்,மதுரையில் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறுகையில்,அரசியல் காரணங்களுக்காக நடிகர் கமல் என்னை சந்திக்கவில்லை.மேலும் நடிகர் கமல் தனது கொள்கையை அறிவிக்கும்போது தான் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூற முடியும் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சேஷனை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க