February 5, 2020
இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.
இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போரடுவேன். இஸ்லாமியர்களுக்குஅச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.
அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது நடத்தப்பட வேண்டும்.தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை என்றார்.