• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்து ஓரிரு நாளில் முடிவு – கங்குலி

July 10, 2017 தண்டோரா குழு

கேப்டன் விராட் கோலியுடன் ஆலோசித்த ஓரிரு நாளில் அணியின் பயிற்சியாளர் யார் என அறிவிக்கப்படும் என்று கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக், மூடி, பைபஸ், டொட்டா கணேஷ், ராஜ்புத், குளூஸ்னர், ராகேஷ் சர்மா, பில் சிம்மன்ஸ், உபேந்திர பிரம்மச்சாரி ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமன் ஆகியோர் அடங்கிய குழு நேர்காணலை நடத்தியது.

நேர்காணலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி,

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலியுடன் ஆலோசித்த ஓரிரு நாளில் அணியின் பயிற்சியாளர் யார் என அறிவிக்கப்படும்.

ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பயிற்சியாளர் தேவை என்பதால் கால அவகாசமும் தேவை. பயிற்சியாளர் பதவிக்கு கேப்டன் கோலி இதுவரை யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை எனக் கூறினார்.எனினும், விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

மேலும் படிக்க