• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 112 பெண்களுக்கு நாளை விருது

January 19, 2018 தண்டோரா குழு

இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த 112 பெண்கள் நாளை குடியரசுத்தலைவர் மாளிகையில் கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந்தியாவில் தாங்கள் பணியாற்றும் துறைகளில், சாதனை புரிந்து, நாட்டிற்கு பெருமை தேடி தந்த சுமார் 112 இந்திய பெண்களை இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. “முதல் மகளிர்” என்ற தலைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட அந்த பெண்களுக்கு நாளை(ஜன 20) மாலை இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெறும் பாராட்டு விழாவில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிக்கவுள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய பசேன்தரி பால் மற்றும் பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும்,இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானிகள் ஆன விமான அதிகாரி பவானா காந்த்,அவானி சதுர்வேதி மற்றும் மோகன சிங் ஆகியோரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். புதுதில்லியின் முதல் பெண் பஸ் ஓட்டுனர் வெங்கடாரத் சரிதா, இந்தியாவின் முதல் பெண் ஆட்டோ டிரைவர் ஷீலா தவாரே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இந்தியாவின் குளோபல் பிராண்ட் தூதர் பதவிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியரான சுசிதா பாலும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க