• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா…!

April 20, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று பரவுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில்,இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80% பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில் விளக்கமளித்துள்ளது.

அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவுவதால் அதை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போது தொற்று உறுதியான நபர்களின் தொடர்பில் இருந்து நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க