• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் முதன் முறையாக நடிகைகள் பாதுகாப்பு சங்கம்

May 19, 2017 தண்டோரா குழு

நடிகை பாவனா காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதன்தொடர்ச்சியாக சினிமாவில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர்.

இதனால் நடிகைகளின் பாதுகாப்பு, சமமாக மதிக்கப்படுவது குறித்து விரிவான விவாதங்கள் எழுந்தன.இந்நிலையில், தற்போது நாட்டில் முதல்முறையாக, மலையாள நடிகைகள் சேர்ந்து ஓர் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியிருக்கின்றனர்.இந்த அமைப்பிற்கு ‘வுமன் இன் சினிமா கலக்ட்டிவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சன்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழி நடத்தவுள்ளனர். மேலும், பெண் கலைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, அதற்கான ஆதரவைப் பெற நேற்று மாலை கேரள முதல்வர் பினராயி விஜயனை இந்த அமைப்பினர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க