• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆவி தான் ஆனால் தெர்மாகோல் போட்டு மூடுவதாகஇருக்காது- கமல்ஹாசன்

April 24, 2017 தண்டோரா குழு

‘ஆவி’ பற்றிய கதை தான் ஆனாலும் தெர்மாகோல் போட்டு மூடுவதாகஇருக்காது என திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில்ட நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
இயக்குனர் அட்லீயின் முதல் தயாரிப்பாக சங்கிலி புங்கிலி தவ தொற என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஜீவா, ஸ்ரீ திவ்யா, தம்பி ராமைய்யா சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எம்.ஆர்.ராதாவின் பேரன் ஜக் இயக்கிய இப்படத்தின் இசையை கமல் வெளியிட்டார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன்,

என்னுடன் பணியாற்றிய பலரும் இப்படத்தில் இருக்கிறார்கள். ஜக், ஜீவா போன்ற மூன்றாம் தலைமுறை சினிமாக்கார்களும் வந்துள்ளார்கள். உங்களுக்கு முன்னாடி இப்படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம் யார் முதலில் படத்தை பார்த்தது என சினிமா ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் அதனால் தான் ஏனோ பைரசி அதிகமாக வருகிறது என்றார்.

மேலும், இப்படம் ஆவி பற்றிய கதை தான் என்று சொன்னார்கள், பரவயில்லை நன்றாக கவர் பண்ணியிருக்கிறார்கள், இது தெர்மாகோல் மாதிரி இல்லை என்று கூறினார். பின்னர் நீங்கள் வேறு எதுவும் நினைத்து விடாதீர்கள் என்று காமெடியாக பேசினார்.

மேலும் படிக்க