• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி?

March 10, 2017 தண்டோரா குழு

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா மறைவை அடுத்து அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சியினர் சசிகலா, ஓபிஎஸ் என்று இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். இதனிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனியாக பேரவை அமைத்துள்ளார். எனவே, ஜெயலலிதா சார்பானவர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக, ஜெயலலிதாவுக்கான வாக்குகள் பிரியக்கூடும். இதன் விளைவாக ஏதிர்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

இத்தொகுதியில் பா.ஜ.க., சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. மேலும், அங்கு கணிசமான அளவில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசிப்பதால், அந்த சமூகத்தைச் சார்ந்த தமிழசை சவுந்தர்ராஜன் போட்டியிவார் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க