• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்எஸ்எஸ் கையெழுத்து இயக்கம்: ‘முத்தலாக்’ முறைக்கு 10 லட்சம் பேர் எதிர்ப்பு

March 18, 2017 தண்டோரா குழு

மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாக ரத்து பெறும் முஸ்லிம்களின் நடைமுறையை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

முத்தலாக் முறையைத் தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “முத்தலாக் முறை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அரசியல் சாசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சமநிலைக்கு எதிரானது” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் (எம்.ஆர்.எம்.) ‘முத்தலாக்’ முறையை ஒழிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

அதில், பெரும்பாலான கையொப்பங்கள் முஸ்லிம் பெண்களுடையவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள பத்து லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்துப் போட்டிருப்பதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் படிக்க