• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் குக்கர் எனும் புதிய செயலி கோவையில் துவக்கம்

December 3, 2022 தண்டோரா குழு

கோவை புலியகுளம் அடுத்த மீனா எஸ்டேட் பகுதியில்,ஆரோக்யமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் புதிய செயலியின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செயலியின் அறிமுக விழாவில் குக்கர் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பிரபா சந்தான கிருஷ்ணன் பேசுகையில்,

வீட்டு முறை உணவகளுக்கு எப்பொழுதும் கோவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரே கூறையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த குக்கர் செயலியை கோவையில் இன்று அறிமுகம் செய்து உள்ளதாகவும் இங்கு, தரமான வீட்டு உணவை தயார்படுத்தும் உணவக கலைஞர்களின் கை வண்ணத்தில் தயாராகும் உணவுகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் தனித்துவமான உணவுகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் குக்கர் ஒரு முன்னோடியாக திகழும் என நம்புவதாக தெரிவித்தார். ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், சேர்ந்து உருவாக்கும் உணவு வகைகளை அனைவருக்கும் மிகைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குக்கர் உதவும் என்றார்.

உணவு துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி வீட்டு உணவு தயாரிப்பாளர்களிடம் இருந்து தரமான உணவுகளை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக கூறினார். கிராமத்தின் மனம் இனி நகரத்திலும் நுகரும் வகையில், மண் மணம் மாறாத வீட்டு முறை உணவுகள் ஒவ்வொன்றையும் கொண்டாடி மகிழுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வீட்டு முறை சமையல் என்பதால், உணவுகளை தயார் படுத்த சுமார் ஒரு மணி நேரம் எடுத்து கொள்வதாகவும், கோவையை 6 பகுதிகளாக பிரித்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை தயார் படுத்தி வழங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக இந்த செயலியை டவுன்லோட் செய்பவர்களுக்கு வெல்கம் ஆஃபர் ஆக 100 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை முதல் ஆடர்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதை நண்பர்களுடன் பகிர்ந்தால் அவர்களுக்கும் ரூபாய் 100 மற்றும் பகிர்ந்தவர்ளுக்கு ரூ.50 வழங்கப்படும். மேலும் இந்த செயலி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் துவக்கி உள்ளோம். தொடர்ந்து தென் மாநிலங்களில் துவக்க உள்ளோம் என்றார்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், குக்கர் இணை நிறுவனர்கள் நிர்மல் குமார், சரவண குமார் கந்தசாமி மற்றும் குக்கர் பொறியாளர் துணை தலைவர் ராமநாதன் மற்றும் குக்கர் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க