• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானில் பாதுகாப்புப்படை மீது தீவிரவாத தாக்குதல் – 12 பேர் பலி

January 21, 2019 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படை முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 3 thiviravathigalதீவிரவாதிகள் உட்பட 12 பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்டாக் மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்புப்படை முகாம் இயங்கி வருகிறது. இன்று அப்பகுதிக்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை அப்பகுதியில் வெடிக்கச் செய்தனர். பின்னர் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படை அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஆப்கான் பாதுகாப்புப்படை virarவீரர்கள் மற்றும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

மேலும் படிக்க