• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிரியர்கள் போரட்டத்தால் மாணர்வர்கள் தவிப்பு – ஆசிரியராக அவதாரம் எடுத்த கோவை எம்.எல்.ஏ

January 24, 2019 தண்டோரா குழு

ஆசிரியர்கள் போராட்டத்தால் கோவையில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ – ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 82வது வார்டு பேட்டை ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆசிரியர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதையறிந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பள்ளிக்கு சென்று பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு உயிரெழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். மேலும், மாணவர்களை எழுதிக் காட்ட சொல்லியும், வாசிக்க சொல்லவும் வைத்தார்.

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ஆசிரியாக மாறி வகுப்பு எடுத்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க