• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறிஞர் அண்ணாவுக்கு திமுக, அதிமுக அஞ்சலி

February 3, 2017 தண்டோரா குழு

பேரறிஞர் அண்ணாவின் 48-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதே போல் அண்ணா சிலைக்கு, திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களும் ஏராளமானோர் தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க