December 19, 2020
தண்டோரா குழு
பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்.ஒரு துண்டு கரும்பிற்கு பதிலாக ஒரு முழு கரும்பு வழங்கப்படும். ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும் என்றார்.
இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.