• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னை அரபு நாட்டுக்கு அரசராக அறிவித்த இந்தியர்

November 15, 2017 தண்டோரா குழு

சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிக்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தன்னை அரசனாக அறிவித்துள்ளார்.

எகிப்து எல்லையின் தென் பகுதிக்கும் சூடான் நாட்டின் வடக்கு பகுதிக்கும் இடையே‘பிர் தவில்’ என்ற வறண்ட பாலைவனப்பகுதி உள்ளது. இதுவரை அந்த பாலைவனப்பகுதியை யாரும் உரிமை கோரவில்லை.இந்நிலையில் இந்திய நாட்டை சேர்ந்த சுயாஷ் திக்‌ஷித் என்பவர் அந்த நிலத்திற்கு தன்னையே அரசனாக அறிவித்துள்ளார்.

எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்கு வந்துள்ள திக்‌ஷித், அங்கு விதைகளை விதைத்து அதற்கு தண்ணீரும் ஊற்றியுள்ளார். ஏற்கனவே சிலர் இப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடியுள்ளனர். இருப்பினும் தற்போது நான் தான் இப்பகுதிக்கு அரசன். உங்களுக்கு வேண்டுமென்றால் போரிட்டு எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய ராஜ்யத்திற்கு ‘தி கிங்டம் ஆப் திக்க்ஷிட்’ என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க