• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் ஆணுறை இல்லையா? போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்

July 13, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம் அரசு மருத்துவமனையில் ஆணுறை இல்லாததால் இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் மருத்துவர்கள் தனியார் மருந்தகத்தில் இருந்து ஆணுறை வாங்கி கொடுத்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவியைச் சந்திக்க திப்தூர் சென்றுள்ளார். இதற்கிடையில், அவர் வீட்டிற்க்குச் செல்லும் முன்பு அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆணுறை கேட்டுள்ளார்.

ஆனால், அங்கு, ஆணுறையும் தானியங்கி இயந்திரமும் இல்லை. இதனால் கணேஷ் கடும் கோபமடைந்தார். இதையடுத்து அங்கு வேலையில் இருந்த மருத்துவர்களையும் பணியாளர்களையும் கேட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் அணுறை கையிருப்பு இல்லை கூறியுள்ளனர். இதனால், தனக்கு ஆணுறை வேண்டும் என்று கணேஷ் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், மருத்துவர்களும், ஊழியர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.இதனால், வேறு வழியில்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் தனியார் மருந்தகத்திற்கு சென்று ஆணுறை வாங்கி அவரிடம் கொடுத்தனர்.

இது குறித்து கணேஷ் கூறும்போது,

“எச்ஐவி மற்றும் பல பாலியல் தொடர்புடைய நோய்கள் விரைவில் தொற்றக் கூடியவை, அவற்றில் இருந்து தடுக்கஆணுறை அவசியம்.அரசு மருத்துவமனைகளில் ஆணுறைகள் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க