• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு “டிஜிட்டல்” உரிமம் வழங்கியது மத்திய அரசு

April 18, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்குமத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்“டிஜிட்டல்” உரிமம் வழங்கியுள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு தமிழக அரசு குறைந்த செலவில் கேபிள் டி.வி. வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தொடங்கியது.இதைத்தொடர்ந்து 2012 ம் ஆண்டு தமிழக அரசு டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.ஆனால்விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் மாநில அரசின் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுவது இது முதல்முறையாகும்.

இதன் மூலம் குறைந்த செலவில் உலக தரம் வாய்ந்த சேவையில் 90முதல் 100 சேனல்களை காணலாம்.

மேலும், அரசு கேபிள்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கிய பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிநன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க