• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமியிடம் இன்று மீண்டும் விசாரணை

April 17, 2017 தண்டோரா குழு

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் தொடர்பாக மீண்டும் சம்மன் அனுப்பியதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி திங்கட் கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 7-ம் தேதியன்று, சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமிக்கு மீண்டும் ஆஜராக வருமானவரித்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக இருவரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உள்ளனர்.

மேலும் படிக்க