• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

May 6, 2017 தண்டோரா குழு

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மோசடி புகாரின் பேரில் மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தன்னிடம் ரூ.30 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மன்னார்குடி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதன் பின்னும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2- ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனிடையே உத்தரவுக்கு பிறகும் வழக்குப் பதிவு செய்யப்படாததை கண்டித்த உச்ச நீதிமன்றம் ‘தமிழக உணவுத் துறை அமைச்ச காமராஜ் மீதான, 30 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அமைச்சர் என்றால், சட்ட விதிகளுக்கு மேலானவரா’ என, கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க