• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அபூதாகீர் மீதான சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

March 27, 2017 தண்டோரா குழு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீரை சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசி குமார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சையது அபுதாகீரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கடந்த 22 ஆம் தேதி கைது செய்து,கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கடந்த வெள்ளியன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு மீதான விசாரணை மேற்கொள்ள ,அபுதாகீர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது. சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரணை செய்ய அபுதாகீர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை நாளை ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார் .

மேலும் படிக்க