• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

January 28, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

2019 மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அதிக காலம் பணிசெய்யும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டி இருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யப்பட கூடாது. 2019 மே 31 அல்லது அதற்கு முன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்திருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க