• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக சசிகலா – டிடிவி தினகரன்

March 9, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுவின் (பார்லிமென்டரி போர்டு) தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.சென்னை ஆர்.கே .நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் வியாழக்கிழமை கூறுகையில்,

“அ.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக க் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக செங்கோட்டையன், டிடிவி தினகரன், பா வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் படிக்க