• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அசாமில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த புதிய திட்டம்

April 10, 2017 தண்டோரா குழு

அசாமில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கொள்கைகளை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அரசு வேலையில் இருப்பதற்கான தகுதி கிடையாது.

டிராக்டர் பெறுதல், அரசு வீடு பெறுதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பிற்கான அரசு நலத்திட்டங்களை பெறவும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி பொருந்தும்.

உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்த விதியை கட்டாயமாக்க மாநில தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது.

அனைத்து பெண்களுக்கும் பல்கலை., வரையில் இலவச கல்வி வழங்கப்படும். இதில் போக்குவரத்து, புத்தகங்கள், விடுதி உள்ளிட்ட செலவினங்களும் அடங்கும். இதனால் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் தடுக்கப்படும்.

பெண்களுக்கு அரசு பணி மற்றும் தேர்தலில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

முதியோர், பெண்கள், ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள், மத தலைவர்கள், என்ஜிஓ.,க்கள், எம்.பி.,க்கள், மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வு கொண்டு வரப்படும்.

மேலும் இந்த கொள்கைகள் மீது ஜூலை மாதம் வரை மக்களின் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன் பிறகு நடக்கும் சட்டசபை கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து இந்த புதிய கொள்கை தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க