• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில பாரத மக்கள் கட்சியினர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை

February 15, 2023 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று, 25வது ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில பாரத மக்கள் கட்சியினர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி .,14 ஆம் தேதி கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், மோட்சதீபம் ஏற்றிபுஷ்பாஞ்சலியை பல்வேறு இந்து அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக இதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் கோவை பர்லி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தீபத்தை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக செய்தியாளர்களிடம் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமநாதன் மற்றும் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.அப்போது, குண்டுவெடிப்பில் இறந்த பொது மக்களின் நினைவாக ஆர் எஸ் புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா துணை தலைவர் சேகர் செய்தி தொடர்பாளர் நாகராஜ் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மோகன் வினோத் மணிகண்டன் மகளிர் அணி தலைவி ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க