• Download mobile app
20 May 2026, WednesdayEdition - 3752
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுபாஷ் சந்திரபோஷ், பாரதமாதா, பிரதமர் நரேந்திர மோடி வேடமணிந்து திறந்த காரில் ஊர்வலம்

August 14, 2022 தண்டோரா குழு

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடும் விதமாக மூன்று சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பாக சுதந்திர தின பேரணி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட பா.ஜ.க.அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் அரசு தொடர்பு பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியில் பா.ஜ.க. கலைச்சார பிரிவு சண்முகம் குழுவினர் பிரதமர் நேரேந்திர மோடி போன்று வேடமணிந்தும் மேலும் பாரதமாதா, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் போன்று வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.

இவர்களை பின்தொடர்ந்து பா.ஜ.க. மாநில,மாவட்ட நிர்வாகிகள் பேரணியாக சென்றனர்.தொடர்ந்து காந்திபுரம், சிவானந்தாகாலனி,லட்சுமி மில்ஸ்,போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் மோகன் குமார், பச்சம்மாள் மற்றும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி துரை என்கிற சின்னதுரை, அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் காந்திமதி, ரவிச்சந்திரன்,சுனில் குமார் மற்றும் பாபு என்கிற நந்து,சுரேஷ், நரேஷ் பாபு என்கிற சின்னா, குமார்,சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க