• Download mobile app
21 May 2026, ThursdayEdition - 3753
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் !

September 22, 2022 தண்டோரா குழு

கோவையில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு 5 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோவையிலும் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது.குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க