• Download mobile app
21 Feb 2026, SaturdayEdition - 3664
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலிசார் கோவையில் வைத்து விசாரணை

November 25, 2021 தண்டோரா குழு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக – இரண்டாவது முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலிசார் கோவையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக போலிசார் தனிப்படை அமைத்து மீண்டும் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இதில் இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சகோதரர் தனபால் உறவினர் ரமேஷை போலிசார் கைது செய்தனர்.

தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன் போலிஸ் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரண்டி உள்ளனர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தனிப்படை போலிசார் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.

எஸ்டேட் முழுவதும் மேற்பார்வை மற்றும் பராமரிப்பு பணிகளை நடராஜன் கவனித்து வந்ததால், சம்பவம் தொடர்பாக தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க