• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துருக்கியில் இரவு விடுதியில் 39 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் கைது

January 17, 2017 தண்டோரா குழு

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 சுட்டுக் கொன்ற நபரைத் துருக்கி காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாட இரவு விடுதி ஒன்றில் 5௦௦ பேர் திரண்டு மகிழ்ச்சியுடன் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில் நள்ளிரவு 1.3௦ மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டார்.

இந்தச் சம்பவத்தில் 39 உயிரிழந்தனர். நாற்பதுக்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இஸ்தான்புல் காவல் துறையினர் புத்தாண்டு தின கொண்டாடத்தின் 39 பேரைச் சுட்டுக் கொன்ற மனிதரை போலீசார் கைது செய்தனர். ஏபு முஹம்மத் ஹோரசினி என்ற பொய்யான பெயரின் கீழ் வந்த அந்த நபரையும் அவரது மகனையும் துருக்கி நாட்டிற்கும் ஐரோப்பிய நாட்டின் எல்லைப் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிரியா நாட்டில் துருக்கி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்குப் பழி வாங்கவே ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்று அறிக்கை விடப்பட்டிருந்தது. அதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் துருக்கி, அரபு, இந்தியா, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க