• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவை மிகுந்த பருப்பு உருண்டைக் குழம்பு செய்ய…!

December 21, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – முக்கால் கப்
துவரம்பருப்பு – கால் கப்
சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு.

தயார் நிலையில் வைக்க வேண்டியவை:

தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க தேவையானவை: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5.

செய்முறை:

உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்யை போட்டு சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மேலும் படிக்க