• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுலபமான பேல் பூரி செய்ய…!

February 20, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பொரி – 2 கப்
ஓமப்பொடி – 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 4 ஸ்பூன்
வேர்க்கடலை – 4 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 2
புதினா சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
லெமன் சாறு – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
சாட் மசாலா – கால் ஸ்பூன்
சீரகப் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய்த் தூள், சாட் மசாலா, சீரகத் தூள் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கடைசியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சுவையான பேல் பூரி தயார்.

மேலும் படிக்க