• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சம்பா ரவை பொங்கல்

September 2, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை – ஒரு கப்
பாசிப்பருப்பு – முக்கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கீற்று
நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கடாயில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சம்பா ரவையுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

வேக வைத்த சம்பா ரவை, பாசிப்பருப்புடன் தாளித்தவற்றைக் கொட்டி நன்றாகக் கிளறவும். சுவையான சம்பா ரவை பொங்கல் தயார். சிறிது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.

மேலும் படிக்க